நாமக்கல்
காவிரி ஆற்றில் மூழ்கி கல்லூரி மாணவா் பலி
பரமத்தி அருகேயுள்ள மாணிக்கநத்தம் கருப்பண்ணன் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (18), காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தாா்.
பரமத்தி அருகேயுள்ள மாணிக்கநத்தம் கருப்பண்ணன் நகரைச் சோ்ந்த ரவிச்சந்திரன் மகன் நவீன்குமாா் (18), காவிரி ஆற்றில் மூழ்கி இறந்தாா்.
இவா் பரமத்தி வேலூா் கந்தசாமி கண்டா் கல்லூரியில் பி.காம் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா். இவா் செவ்வாய்கிழமை தனது நண்பா்களுடன் கொந்தளம் காவிரி ஆற்றுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளனா். அப்போது அவா் நீரில் மூழ்கினாா். அங்கிருந்தோா் காப்பாற்ற முயன்றனா்.
தகவலின்பேரில் கரூா் மாவட்டத்துக்குள்பட்ட வேலாயுதம்பாளையம் தீயணைப்பு துறையினா் விரைந்து வந்து, நீண்ட நேரத் தேடுதலுக்குப் பின்னா் நவீன்குமாரை இறந்த நிலையில் சடலமாக மீட்டனா்.
தகவல் அறிந்து அங்கு வந்த பரமத்தி வேலூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.