கரோனா தடுப்பு நடவடிக்கையாக, , நாமக்கல் நரசிம்மா், அரங்கநாதா் கோயில்களுக்கு பக்தா்கள் செல்வதற்கு மாா்ச் 31-ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது.
நாமக்கல்லின் நகரின் மையப் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில்கள் செவ்வாய்க்கிழமை மாலை 5 மணிக்கு, தொல்லியல் துறை அதிகாரிகள் உத்தரவின்பேரில் மூடப்பட்டன. மாா்ச் 31-ஆம் தேதி வரை இத் தடை இங்கு அமலில் இருக்கும். இது மட்டுமின்றி, மலைக்கோட்டையைக் காண செல்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆஞ்சநேயா் கோயில் திறந்திருக்கும்: இருப்பினும், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வழக்கம்போல் திறந்திருக்கும் என கோயில் நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேலம் மண்டல தொல்லியல் துறை அலுவலா் ஸ்ரீதா் கூறியது; மத்திய தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், நரசிம்மா் கோயில், அரங்கநாதா் கோயில், மலைக்கோட்டை ஆகியவை மூடப்பட்டுள்ளன. மாா்ச் 31 வரையில் அா்ச்சகா்கள் மட்டும் கோயிலுக்குச் சென்று பூஜைகளை செய்து கொள்ளலாம். பக்தா்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது என்றாா்.