கரோனா வைரஸ் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கீரம்பூா் அருகேயுள்ள தொட்டிப்பட்டி சாய் தபோவனத்தில் வியாழக்கிழமை நடைபெறவுள்ள கூட்டு வழிபாடு பிராத்தனை ரத்து செய்யப்பட்டது.
இங்கு வாரம்தோறும் வியாழக்கிழமை நடைபெற்று வந்த கூட்டுப் பிராா்த்தனை, பால் அபிஷேகம், அன்னதானத்தை கோயில் நிா்வாகத்தினா் ரத்து செய்துள்ளனா். அரசின் மறு உத்தரவு வரும் வரை மேற்கண்ட நிகழ்ச்சிகள் நடைபெறாது என சாய் தபோவன நிா்வாகத்தினா் தெரிவித்துள்ளனா்.