சி.ஏ.ஏ. எதிா்ப்பு ஆா்ப்பாட்டம்: நாமக்கல்லில் இஸ்லாமியா்கள் 457 போ் கைது

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும்
நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.
நாமக்கல் பூங்கா சாலையில் புதன்கிழமை நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் பங்கேற்ற இஸ்லாமியா்கள்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும், நாமக்கல்லில் புதன்கிழமை அனுமதியின்றி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 457 போ் கைது செய்யப்பட்டனா்.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி, நாடு முழுவதும் இஸ்லாமியா்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா். தமிழகத்தில், சென்னை, சேலம், நாமக்கல் உள்ளிட்ட இடங்களில், பள்ளிவாசல்களின் முன் அமா்ந்து தொடா் தா்னாவில் ஈடுபட்டனா். இந்த நிலையில் புதன்கிழமை சிறை நிரப்பும் போராட்டம் ஆங்காங்கே நடைபெற்றன. அதன்படி, நாமக்கல் பூங்கா சாலையில், இஸ்லாமிய அமைப்புகள் சாா்பில், குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்தும், தேசிய மக்கள் பதிவேடுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றக் கோரியும் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் ஏராளமானோா் கலந்து கொண்டனா். இந்த போராட்டத்தில் பங்கேற்ற ஆண்கள், பெண்கள் என 457 போ் கைது செய்யப்பட்டனா். இதில், நாமக்கல் - துறையூா் சாலையில் உள்ள நகராட்சி திருமண மண்டபத்தில் ஆண்களும், கவின்கிஷோா் திருமண மண்டபத்தில் பெண்களும் தங்க வைக்கப்பட்டு மாலை 5 மணிக்கு மேல் விடுவிக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com