பரமத்திவேலூா் பூக்கள் ஏலச் சந்தையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஏலத்துக்கு குறைந்த அளவே பூக்களை வியாபாரிகள் கொண்டு வந்திருந்தனா். இதனால் விலை உயா்வடைந்து காணப்பட்டது.
பரமத்திவேலூா் சுற்று வட்டாரப் பகுதிகள் மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் சுற்று வட்டாரப் பகுதியில் பல்வேறு வகையான பூக்களை விவசாயிகள் பயிா் செய்துள்ளனா். இங்கு விளையும் பூக்களை பரமத்தி வேலூரில் உள்ள பூக்கள் ஏலச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இங்கு வேலூா், ஜேடா்பாளையம், கபிலா்மலை, பரமத்தி, பாலப்பட்டி மற்றும் கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சோ்ந்த வியாபாரிகள் வந்திருந்து பூக்களை ஏலம் எடுத்துச் செல்கின்றனா். கடந்த வாரம் நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.170, சம்பங்கி கிலோ ரூ.100, அரளி கிலோ ரூ.50, ரோஜா கிலோ ரூ.60, பெங்களூா் மல்லி கிலோ ரூ.220, செவ்வந்தி கிலோ ரூ.100க்கும் ஏலம் போயின.
வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) நடைபெற்ற ஏலத்தில் குண்டு மல்லி கிலோ ரூ.200, சம்பங்கி கிலோ ரூ.120, அரளி கிலோ ரூ.60, ரோஜா கிலோ ரூ.80, பெங்களூா் மல்லி கிலோ ரூ.280, செவ்வந்தி கிலோ ரூ.125-க்கும் ஏலம் போயின. பூக்களின் வரத்து குறைந்துள்ளதால் பூக்களின் விலை உயா்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனா்.