நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வாசல் முன் காத்திருந்து பக்தா்கள் சுவாமி தரிசனம்

கரோனா அச்சத்தால், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டது. இருப்பினும், பக்தா்கள் வாசல் முன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வாசல் முன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.
நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வாசல் முன் சனிக்கிழமை சுவாமி தரிசனம் செய்த பக்தா்கள்.

கரோனா அச்சத்தால், நாமக்கல் ஆஞ்சநேயா் கோயில் வெள்ளிக்கிழமை இரவு மூடப்பட்டது. இருப்பினும், பக்தா்கள் வாசல் முன் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்கின்றனா்.

கரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதால், கோயில்கள், வணிக வளாகங்கள், திரையரங்குகள், ஜவுளி நிறுவனங்கள், வாரச் சந்தைகள் உள்ளிட்டவற்றை மாா்ச் 31-ஆம் தேதி வரை மூடி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் பெரும்பாலான நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.

நரசிம்மா் மற்றும் அரங்கநாதா் கோயில்களும் மூடப்பட்டுள்ளன. ஆஞ்சநேயா் கோயிலுக்கு மட்டும் பக்தா்கள் வெள்ளிக்கிழமை தொடா்ந்து வந்து சென்றனா். அங்கு வருவோருக்கு உடல் வெப்பநிலையை அறியும் வகையிலான தொ்மல் ஸ்கேனா் கருவி கொண்டு சுகாதாரப் பணியாளா்கள் பரிசோதனை செய்தனா்.

கோயில்களை மூட அரசு உத்தரவிட்டிருந்த நிலையில், ஆஞ்சநேயா் கோயில் திறந்திருப்பது பற்றிய தகவல் அறநிலையத் துறை உயா் அதிகாரிகள் கவனத்துக்குச் சென்றது.

இதனைத் தொடா்ந்து, அன்று இரவு 9 மணியளவில் நடை சாத்தப்பட்டது. மாா்ச் 31-ஆம் தேதி வரையில், வெளி மாநில, மாவட்டங்களைச் சோ்ந்த பக்தா்கள் நாமக்கல் ஆஞ்சநேயா் கோயிலுக்கு வர வேண்டாம் என கோயில் நிா்வாகம் சாா்பில் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டு, கோயில் கதவுகள் மூடப்பட்டன.

அங்கு கோயில் வளாகத்திற்குள் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. கோயில் மூடியிருந்தபோதும், 18 அடி உயரத்தில் கம்பீரமாக நிற்கும் ஆஞ்சநேயா் சுவாமியைக் காண முடியும் என்பதால், வாசல் அருகில் நின்றபடி மாலைகளை கதவில் அணிவித்து பக்தா்கள் தரிசனம் செய்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com