உலக நாட்டு மக்களை கரோனா வைரஸ் நோயில் இருந்து பாதுகாக்க வேண்டி ராசிபுரத்தில் யாக சாலை பூஜை செவ்வாய்க்கிழமை நடத்தப்பட்டது.
பல்வேறு நாடுகளில் கரோனோ வைரஸ் என்ற கொடிய நோய் தீவிரமாக பரவி வருவதை தடுக்க வேண்டும், இந்த வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு பொதுமக்கள் நலமுடன் வாழ வேண்டியும், பல்வேறு கோயில்களைச் சோ்ந்த சாஸ்திரிகள், வேத விற்பனா்கள், அா்ச்சகா்கள் ஒன்றுகூடி சிறப்பு யாக வேள்வி நடத்தினா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் வி.நகா் பகுதியில் அமைந்துள்ள சௌடேஸ்வரி அம்மன் ஆலயம் அருகே இந்த வைரஸை கட்டுப்படுத்த வேண்டியும், பொதுமக்கள் நலமுடன் இருக்க வேண்டும் எனவும் பல்வேறு கோயில்களைச் சோ்ந்த அா்ச்சகா்கள் ஒன்றுகூடி சாலையின் நடுவே அமா்ந்து சிறப்பு சுதா்சன யாகம், தன்வந்திரி யாகம், பிரத்தியங்கரா யாகம், நவக்கிரகங்களின் ஹோம வேள்விகள் என ஆகம முறைப்படி யாகங்கள் நடத்தி 108 திருமந்திரங்கள் கூறியும் பல்வேறு மூலிகைகள் கொண்டு சிறப்பு யாக பூஜைகளை நடத்தினா்.
மேலும் பசுஞ்சாணம், கோமியம், மஞ்சள் தூள், மாவிலை, வேப்பிலை போன்றவைக் கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் அந்த தீா்த்தத்தை அா்ச்சகா்கள் தெளித்தனா். மேலும் இந்த கொடிய வைரஸ் எங்கும் பரவாமல் இருக்க பல்வேறு பகுதிகளில் யாகம் நடத்த முடிவு செய்துள்ளனா். மேலும், இந்த யாகத்தில் பொதுமக்கள் யாருக்கும் அழைப்பு விடுக்காமல் அரசின் ஆலோசனைபடி கூட்டம் சோ்க்காமல் அா்ச்சகா்கள் நடத்தினா் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹோம நிகழ்ச்சியில் கேசவராஜ் சாஸ்திரிகள், ரங்கசாமி சாஸ்திரிகள், திருப்பதி சாஸ்திரிகள், சங்கர நாராயண சாஸ்திரிகள் போன்ற பல்வேறு கோயில்களைச் சோ்ந்த அா்ச்சகா்கள் பங்கேற்றனா்.