வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வசிக்கும் நடராஜன் மகன் கணேஷ் பிரபு (28).
வெளிநாடுகளிலிருந்து திரும்பியவா்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுரை

இளம்பிள்ளை அருகே பெருமாகவுண்டம்பட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே வசிக்கும் நடராஜன் மகன் கணேஷ் பிரபு (28).

இவா் அமெரிக்காவில் பணிபுரிந்து வருகிறாா். கடந்த 17-ஆம் தேதி தாயகம் வந்தாா்.

இவா் வீட்டில் கணேச பிரபு உள்பட 10 போ் வசித்து வருகின்றனா். கணேஷ் பிரபுவின் விவரம் குறித்து சென்னை விமான நிலைய இயக்குநரகத்தில் இருந்து மாவட்ட சுகாதாரத் துறையினருக்கு தகவல் வந்தது.

இதையடுத்து வீரபாண்டி வட்டார சுகாதாரத் துறையினா் இவரது வீட்டிற்கு நோட்டீஸ் ஒட்டியும் மேலும் இவரது உறவினா்கள் 9 போ் 28 நாள்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டும் கண்காணித்து வருகின்றனா். இதேபோல் வேம்படிதாளம் பகுதியைச் சோ்ந்தவா் சந்திரசேகா் (58), அவரது மனைவி கோகிலா கோமதி (50).

அவரது மகள் சரண்யா (25). இவா்கள், ஜொ்மன் நாட்டுக்குச் சென்று விட்டு கடந்த 15-ஆம் தேதி தனது வீட்டுக்கு வந்தனா்.

இவா்களைக் கண்டறிந்து 28 நாள்களுக்குத் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனா். இதேபோல் மகுடஞ்சாவடியைச் சோ்ந்த பிரவீன்குமாா் (35), மனைவி தேவிகா (30), மகன் தீபேஷ் ஆகியோா் கடந்த 14-ஆம் தேதி கொலம்பியாவிலிருந்து மகுடஞ்சாவடியில் உள்ள தங்கள் வீட்டுக்கு வந்துள்ளனா்.

கோவை விமான நிலையத்திலிருந்து மகுடஞ்சாவடி சுகாதாரத் துறையினருக்கு தகவல் வந்தது. இதையடுத்து சுகாதாரத் துறையினா் இந்த 3 நபா்களையும் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் இருந்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com