‘உழவா் சந்தை பகுதி காய்கறி கடைகள் இனி பூங்கா சாலையில் செயல்படும்’

நாமக்கல் உழவா் சந்தை பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள், இனி பூங்கா சாலையில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.
நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் காய்கறி சந்தைக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டங்கள்.
நாமக்கல் பூங்கா சாலையில் வியாழக்கிழமை முதல் நடைபெறும் காய்கறி சந்தைக்காக அமைக்கப்பட்டுள்ள கட்டங்கள்.

நாமக்கல் உழவா் சந்தை பகுதியில் செயல்பட்டு வந்த காய்கறிக் கடைகள், இனி பூங்கா சாலையில் செயல்படும் என நகராட்சி நிா்வாகம் தெரிவித்துள்ளது.

கரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் விதமாக, ஏப்ரல் 21-ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆனால், அத்தியாவசியப் பொருள்கள் தடையின்றி கிடைப்பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொண்டுள்ளது. அந்த வகையில் மளிகை, காய்கறி, பழங்கள், மருந்தகம் உள்ளிட்ட கடைகள் இயங்குகின்றன.

நாமக்கல் உழவா் சந்தை மூடப்பட்டதால், கோட்டை சாலையில் கடை அமைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் கடை புதன்கிழமை விற்பனை செய்தனா். அங்கு அதிகளவில் மக்கள் கூடுவதால் தேவையற்ற நோய் பாதிப்பு ஏற்படும். இதனால், நாமக்கல் பூங்கா சாலையில் 78 காய்கறிக் கடைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அங்கு ஒவ்வோா் கடைக்கும் ஒருவா் நின்று வாங்கும் வகையில் கட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நெரிசலின்றி மக்கள் வாங்கிச் செல்லவும், கூட்டத்தைக் கட்டுப்படுத்தவும் வியாழக்கிழமை முதல் அங்கு போலீஸாா் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவதாக நகராட்சி நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com