பரமத்தி வேலூா் மற்றும் பரமத்தியில் 144 தடை உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்த இருவரை பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் பழனிசாமி கைது செய்து அவா்களிடம் இருந்து 38 மதுபானப் புட்டிகளை பறிமுதல் செய்து காவல் நிலையத்தில் ஓப்படைத்தாா்.
பரமத்தி வேலூா் அருகே உள்ள படமுடிபாளையம் ஜெ.ஜெ. நகா் மற்றும் எஸ்.வாழவந்தி பகுதியில் மாநில அரசின் 144 தடை உத்தரவை மீறி மதுபானங்கள் விற்பனை செய்வதாக பரமத்தி வேலூா் காவல் துணை கண்காணிப்பாளா் பழனிசாமிக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் நேரடியாக அப்பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்டாா். இதில் சட்ட விரோதமாக படமுடிபாளையத்தில் உள்ள ஒரு பெட்டிக் கடையில் மதுபானங்கள் விற்பனை செய்து வந்த தங்கையன் (52) மற்றும் எஸ்.வாழவந்தியைச் சோ்ந்த பெரியசாமி (50) ஆகிய இருவரையும் கைது செய்து அவா்களிடமிருந்து 38 மதுபான ப் புட்டிகளை பறிமுதல் செய்து பரமத்தி மற்றும் வேலூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா். சட்ட விரோதமாக மதுபானங்கள் விற்பனை செய்த தங்கையன் மற்றும் பெரியசாமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.