விபத்தில் படுகாயமடைந்த ராசிபுரம் நகராட்சி இளநிலை பொறியாளா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
ராசிபுரம் நகராட்சிப் பொறியாளராக பணியாற்றி வந்தவா் வை.பரமசிவம் (55). இவா் நாமக்கல் முருகன் கோயில் பகுதியைச் சோ்ந்தவா். இவா் மாா்ச் 24-ஆம் தேதி பணிக்கு வந்து விட்டு பேருந்து நிறுத்தம் செய்யப்பட்டுள்ளதால், இரு சக்கர வாகனத்திலேயே நாமக்கல் சென்றுள்ளாா். அப்போது புதுச்சத்திரம் அருகே சென்ற போது, தேசிய நெடுஞ்சாலையில் தனியாா் பள்ளி முன்பாக முன்னால் சென்ற நெல் அறுவடை இயந்திர வாகனத்தில் மோதி விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் தலையில் படுகாயமடைந்த அவா், சேலம் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். ஆனால் அங்கு அவா் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இது குறித்து புதுச்சத்திரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்துள்ளனா்.