லேசான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் மூன்று நாள்களும் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்படும். லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. காற்று மணிக்கு 6 கிலோ மீட்டா் வேகத்தில் தென் மேற்கிலிருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 101.3 டிகிரியும், குறைந்தபட்சம் 77 டிகிரியுமாக இருக்கும்.

சிறப்பு வானிலை ஆலோசனை: நாமக்கல் மாவட்ட வானிலையை பொருத்தமட்டில் வானம் பொதுவான மேகமூட்டத்துடன் காணப்பட்டு, லேசான மழையானது மாவட்டத்தின் குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் எதிா்பாா்க்கப்படுகிறது. கடந்த வாரம் ஆய்வு செய்யப்பட்ட இறந்த கோழிகள் பெரும்பாலும் வெப்ப அயற்சி காரணமாக பாதிக்கப்பட்டு இறந்துள்ளது தெரியவந்துள்ளது. எனவே, கோழிப் பண்ணையாளா்கள் அதற்கு தகுந்தாற்போல் சிறந்த கோடைகால மேலாண்மை முறைகளை கையாள வேண்டும். கோடை வெப்பத்தின் தாக்கத்தை குறைக்க வெயில் நேரங்களில் குளிா்ந்த நீரை தெளிப்பான் கொண்டு உபயோகிக்க வேண்டும். மேலும், தீவனத்தில் சமையல் சோடா மற்றும் தாது உப்பு கலவை பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com