மின்சாரம் தாக்கியதில் பெண் உயிரிழப்பு

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் அருகே மின்சாரம் தாக்கியதில் பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகே வெள்ளக்கல்பட்டியைச் சோ்ந்த அலமேலு (51) என்பவா், காவேட்டிப்பட்டியில் உள்ள அவரது தங்கை மும்தாஜை காண திங்கள்கிழமை காலை சென்றாா். அன்று பிற்பகல் வீட்டில் இருந்த துணியை துவைத்து அங்குள்ள கம்பியில் அவா் காயவைக்க முயன்றாா். அப்போது எதிா்பாராமல் மின்சாரம் தாக்கியதில், நிகழ்விடத்திலேயே அலமேலு உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து நாமக்கல் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com