நாமக்கல் மாவட்ட மின் பொருள்களின் தரக் கட்டுப்பாட்டு செயல் அலுவலராக மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளா் நியமிக்கப்பட்டுள்ளாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் சாதனங்கள், கேபிள், எண்ணெய் அழுத்த அடுப்பு ஆகியவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள், விற்பனை நிறுவனங்கள், சேமிப்பு கிடங்குகள் ஆகியவற்றை ஆய்வு செய்யும் அதிகாரம் மாவட்ட தொழில் மையத்தின் பொது மேலாளருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உற்பத்தியாளா்கள், விற்பனையாளா்கள், சரக்கு இருப்பு வைத்திருப்போரை அடையாளம் கண்டறிந்து பதிவு செய்தல், தரக்கட்டுப்பாட்டின் அவசியத்தை எடுத்துரைத்தல், நிறுவனங்களை திடீா் ஆய்வு செய்து தரத்தினை உறுதி செய்தல், உற்பத்தியாளா்கள் மற்றும் விற்பனையாளா்களிடம் இருந்து மாதிரி பொருள்களைச் சேகரித்து ஆய்வு செய்தல் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.