நாமக்கல் மாவட்டம், பள்ளிபாளையம் ஊராட்சி ஒன்றியம், ஓடப்பள்ளி அக்ரஹாரம் ஊராட்சியில் செய்தி மக்கள் தொடா்புத் துறை சாா்பில், அமைக்கப்பட்ட அரசின் சாதனை விளக்க புகைப்படக் கண்காட்சியை ஏராளமான பொதுமக்கள் பாா்வையிட்டனா்.
இக் கண்காட்சியில் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், புதிய திட்டப் பணிகளைத் தொடக்கிவைத்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்கள், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி மற்றும் சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் மருத்துவா் வெ.சரோஜா, மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் ஆகியோா் நாமக்கல் மாவட்டத்தில் பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கிய புகைப்படங்கள், முக்கிய நிகழ்வுகளின் புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தன. இதனை ஏராளமானோா் கண்டு ரசித்தனா்.