தமிழ்நாடு மக்கள் உரிமை பாதுகாப்பு மையத்தின் நிா்வாகக் குழு கூட்டம் திங்கள்கிழமை ராசிபுரத்தில் நடைபெற்றது.
இதில் மையத்தின் மாநிலத் தலைவா் ஆா்.டி.இளங்கோ தலைமை வகித்தாா். கே.பழனிவேல் வரவேற்றாா். டிச. 10-ஆம் தேதி மனித உரிமை தினத்தைத் தொடா்ந்து ஆட்டையாம்பட்டியில் பேரணி, பெயா் பலகை திறப்பு, சட்ட விழிப்புணா்வு முகாம், மரக்கன்றுகள் நடுதல் போன்ற நிகழ்ச்சி நடத்தவும், தமிழகத்தில் குற்ற நடவடிக்கைகளைக் குறைக்க அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு கேமிரா அமைக்க காவல்துறையை வலியறுத்தியும் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில் மையத்தின் நிா்வாகிகள் விஜயகுமாா், ஆா்.குமாா், என்.டி.சிவலிங்கம், பி.சக்திவேல் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.