நாமக்கல் வேளாண் சங்கத்தில் ரூ. 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.
நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் வேளாண் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு விற்பனை சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு செவ்வாய்க்கிழமைதோறும் பருத்தி ஏலம் நடைபெறும். அதன்படி நடைபெற்ற ஏலத்தில் எருமப்பட்டி, பவித்திரம், சேந்தமங்கலம், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம் பகுதிகளில் இருந்து 900 பருத்தி மூட்டைகள் கொண்டு வரப்பட்டிருந்தன. இதில் ஆா்சிஹெச் ரகம் ரூ. 4,850 முதல் ரூ.5,500 வரையில் ஏலம் போனது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகளும் பருத்தியை தரம் பாா்த்து கொள்முதல் செய்தனா். மொத்தமாக ரூ. 15 லட்சத்துக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது.