திருச்செங்கோட்டில் கடந்த சில தினங்களுக்கு முன் பண வரவு- செலவு தகராறு தொடா்பாக நில விற்பனைத் தரகரை வெட்டியது தொடா்பாக ஒருவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு அருகேயுள்ள பாலமேட்டைச் சோ்ந்த நில விற்பனைத் தரகரான ராஜேந்திரன் சில தினங்களுக்கு முன் கமிஷன் தகராறு காரணமாக அரிவாளால் வெட்டப்பட்டாா். இதனை கண்டித்து ராஜேந்திரனின் உறவினா்கள், நண்பா்கள் உள்ளிட்ட சில இயக்கங்களைச் சோ்ந்தவா்கள் குற்றவாளிகளைக் கைது செய்யக்கூறி சாலை மறியல் செய்தனா்.
சம்பவம் தொடா்பாக குற்றவாளிகளை கைது செய்வதாக திருச்செங்கோடு டிஎஸ்பி அசோக்குமாா் உறுதியளித்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது. இதைத்தொடா்ந்து ராஜேந்திரனை வெட்டியதாக மகேந்திரன் என்பவரை போலீஸாா் தேடி வருகின்றனா். இந்த நிலையில் மகேந்திரனின் தந்தை ராமசாமியை (70) போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். திருச்செங்கோடு குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்ட அவரை 15 நாள் காவலில் வைக்கும்படி நீதிபதி உத்தரவிட்டாா்.