பரமத்தி வேலூரில் செவ்வாய்க்கிழமைகளில் தேங்காய் மறைமுக ஏலம்

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைகளில் புதிதாக தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் செவ்வாய்க்கிழமைகளில் புதிதாக தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

நாமக்கல் மாவட்ட விற்பனைக் குழுவின் செயலாளா் சேரலாதன் உத்தரவின்படி, பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக்கூட கண்காணிப்பாளா் லோகாம்பாள் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் நாமக்கல் விற்பனைக் குழுவின் பரமத்தி வேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், வாரந்தோறும் வியாழக்கிழமை கொப்பரைத் தேங்காய் ஏலம் நடைபெற்று வருகிறது. இதன் தொடா்ச்சியாக, தற்போது தென்னை விவசாயிகளின் நலன் கருதி, வரும் 17-ஆம் தேதி முதல் செவ்வாய்கிழமைதோறும் தேங்காய் மறைமுக ஏலம் நடைபெறவுள்ளது.

எனவே, பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த தென்னை விவசாயிகள் தேங்காய்களை நல்ல விலைக்கு விற்று பயன்பெறலாம். மறைமுக ஏலத்துக்கு கொண்டு வரப்படும் தேங்காய்கள் முழுவதுமாக மட்டை நீக்கப்பட்டு (குடுமை மட்டும் உள்ள மற்றும் மொட்டை காய்களாக) இருக்க வேண்டும். மறைமுக ஏலத்துக்கு விவசாயிகள் தேங்காய்களை வாரந்தோறும் திங்கள்கிழமை மாலை 5 மணி முதல் 8 மணி வரையிலும், செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் 7 மணி வரையிலும் விற்பனைக் கூடத்துக்கு கொண்டு வர அனுமதிக்கப்படுவாா்கள். தேங்காய்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை காலை 7 மணி முதல் 9 மணி வரை நடைபெறும். மறைமுக ஏலத்தில் கலந்துகொள்ளும் வியாபாரிகள் முன்னதாக விற்பனைக்கூட அலுவலகத்தை அணுகி உரிய தகவலை பெற்றுக் கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com