சாலை விரிவாக்கத்துக்காக 14 மரங்களை வெட்டும் ஏலம்

நாமக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுவதற்கான ஏலம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
மரங்கள் வெட்டுவதற்கான பொது ஏலத்தில் பங்கேற்றோா்.
மரங்கள் வெட்டுவதற்கான பொது ஏலத்தில் பங்கேற்றோா்.

நாமக்கல்லில் சாலை விரிவாக்கத்துக்காக மரங்களை வெட்டுவதற்கான ஏலம், நெடுஞ்சாலைத் துறை அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், கோட்டப் பொறியாளா் சந்திரசேகா், உதவி கோட்டப் பொறியாளா் அசோக்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

நாமக்கல், நளா ஹோட்டல் முதல் சின்னவேப்பநத்தம் வரையில் ஏற்கெனவே சாலையின் ஒருபுறம் உள்ள 27 மரங்களை வெட்டுவதற்கு பொது ஏலம் நடைபெற்றது.

அதற்குப் பின் சாலையின் மறுபுறம் உள்ள 14 மரங்களையும் வெட்டுவதற்கான ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் -ரூ. 1 லட்சத்து 30 ஆயிரத்துக்கு ஏலம் விடப்பட்டது. 20-க்கும் மேற்பட்டோா் ஏலத்தில் பங்கேற்றனா். மரங்களை வெட்ட ஏலம் கிடைக்காதோா் செலுத்திய முன்பணத் தொகையைத் திரும்ப பெற்றுக் கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com