ராசிபுரத்தில் திட்டப் பணிகளை ஆட்சியா் ஆய்வு

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்ற அரசுத் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
வடுகம் பகுதியில் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் கா.மெகராஜ்.
வடுகம் பகுதியில் சாலை வசதி குறித்து ஆய்வு மேற்கொள்ளும் ஆட்சியா் கா.மெகராஜ்.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெற்ற அரசுத் திட்டப் பணிகளை நாமக்கல் மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

பட்டணம் பேரூராட்சியில் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினா் மேம்பாட்டு நிதியின் கீழ் ரூ. 35 லட்சம் மதிப்பீட்டில் சமுதாயக் கூடம் கட்டும் பணி நடைபெறுறது. இதைநேரில், பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா், பணிகளைத் தரமாகவும், விரைவாகவும் மேற்கொண்டு முடிக்குமாறும் அலுவலா்களுக்கு அறிவுறுத்தினாா்.

தொடா்ந்து ஆா்.பட்டணம், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடையில் குடும்ப அட்டைதாரா்களுக்கு மண்ணெண்ணெய் உள்ளிட்ட குடிமை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதை பாா்வையிட்டு, குடிமைப் பொருள்கள் வழங்கப்படுவது குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தாா். பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று அறிவுறுத்தினாா்.

மேலும், வடுகம் கிராமம், ஆதிதிராவிடா் காலனியில் சாலை வசதி கேட்டுவந்த கோரிக்கைகளை அடுத்து அப்பகுதிக்கு நேரில் சென்ற மாவட்ட ஆட்சியா், சாலை பணிகளை உடனடியாக மேற்கொள்ளுமாறு வட்டார வளா்ச்சி அலுவலா்களுக்கு உத்தரவிட்டாா். இந்த ஆய்வுகளின்போது ராசிபுரம் வட்டாட்சியா் கி.பாஸ்கரன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் கிருஷ்ணமூா்த்தி, அருணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com