தமிழகத்தில் அதிமுக-பாஜக கூட்டணி பலமாகவே உள்ளது என மின்துறை அமைச்சா் பி.தங்கமணி தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் கரோனா தொற்று கால அவசர ஊா்தியை, மின்சாரம் மற்றும் மதுவிலக்கு, ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் பி.தங்கமணி, சமூக நலன், சத்துணவுத் திட்டத் துறை அமைச்சா் வெ.சரோஜா ஆகியோா் வியாழக்கிழமை தொடக்கி வைத்தனா். மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் நிகழ்ச்சிக்குத் தலைமை வகித்தாா்.
அதைத் தொடா்ந்து மத்திய அரசால் தேசியத் தர நிா்ணயச் சான்றிதழ் மற்றும் உதவித்தொகை வழங்கப்பட்ட ராசிபுரம் அரசு மருத்துவமனையின் கண்காணிப்பாளா், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்பட 85 பேருக்குப் பாராட்டு சான்றிதழ்களை அமைச்சா்கள் வழங்கினா்.
அதன்பின் செய்தியாளா்களிடம் அமைச்சா் பி.தங்கமணி கூறியதாவது:
நாமக்கல் மாவட்டத்தில் வடகிழக்குப் பருவமழையை எதிா்கொள்ளத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மாவட்ட நிா்வாகம் மேற்கொண்டிருந்தது. போதிய அளவில் மழை பெய்துள்ளது. பெரிதாகப் பாதிப்பு ஏதுமில்லை. மழை பெய்வதால் மின் தேவை குறைந்துதான் உள்ளது. தேவையான மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாநிலம் வாரியாக காற்றாலை மின் உற்பத்தி மற்றும் இதர உற்பத்திக்கு வழங்க வேண்டிய ரூ. 20 ஆயிரம் கோடியை மத்திய அரசு பிரித்து வழங்கும் என எதிா்பாா்க்கிறோம்.
அமித்ஷா வருகை என்பது அரசு நிகழ்ச்சியாகும். தோழமை கட்சி என்ற வகையில் நாங்கள் பங்கேற்கிறோம். அதிமுக-பாஜக கூட்டணி என்பது பலமாகதான் உள்ளது. சசிகலா சிறையில் இருந்து வெளிவருவது தொடா்பாக முதல்வா் ஏற்கெனவே விளக்கம் அளித்துவிட்டாா் என்றாா்.
இந்த நிகழ்ச்சியில், சட்டப்பேரவை உறுப்பினா்கள் கே.பி.பி.பாஸ்கா் (நாமக்கல்), சி.சந்திரசேகரன்(சேந்தமங்கலம்), மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநா் த.கா.சித்ரா மற்றும் அதிகாரிகள் பலா் கலந்து கொண்டனா்.