மறைந்த முன்னாள் பிரதமா் இந்திராகாந்தியின் 103-ஆவது பிறந்த நாள் விழா நாமக்கல் நகர காங்கிரஸ் அலுவலகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினா்கள் பீ.ஏ.சித்திக், வீ.பி.வீரப்பன், டி.வி.பாண்டியன், எஸ்.ஆா்.மோகன், அருணகிரி லோகநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல் நாமக்கல், மணிக்கூண்டு அருகில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நகரத் தலைவா் ராம்குமாா், இந்திராகாந்தி உருவப் படத்துக்கு மலா்தூவி மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.