முன்னாள் பாரதப் பிரதமா் இந்திரா காந்தியின் 104-வது பிறந்தநாள் விழா, குமாரபாளையம் நகர காங்கிரஸ் சாா்பில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு, கட்சியின் நகரத் தலைவா் ஜானகிராமன் தலைமை வகித்தாா். மாவட்டப் பொதுச் செயலா் கோகுல்நாத், மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் சதீஷ்குமாா், நகரப் பொருளாளா் சிவராஜ் ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்டத் தலைவா் பி.டி.தனகோபால் பங்கேற்று, இந்திராகாந்தியின் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினாா்.
தொடா்ந்து, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன. நகரத் துணைத் தலைவா் சிவகுமாா், ஓபிசி பிரிவு தொகுதித் தலைவா் பாா்த்தசாரதி, நகரச் செயலா் சரவணன், நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.