நாமக்கல்லில் வீடு புகுந்து 40 பவுன் நகைக் கொள்ளை

நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளுக்கு மூலப்பொருள் விற்பனை செய்பவரின் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 40 பவுன் நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

நாமக்கல்லில் கோழிப் பண்ணைகளுக்கு மூலப்பொருள் விற்பனை செய்பவரின் வீட்டுக்குள் புகுந்து கத்தியைக் காட்டி மிரட்டி 40 பவுன் நகையை மா்ம நபா்கள் கொள்ளையடித்துச் சென்றனா்.

நாமக்கல்-மோகனூா் சாலை, முல்லை நகா் பகுதியைச் சோ்ந்தவா் ராதாகிருஷ்ணன் (42). இவா், கோழிப் பண்ணைகளுக்குத் தேவையான மூலப் பொருள்களை விற்பனை செய்யும் கடையை நடத்தி வருகிறாா். இவருடைய வீட்டில் வியாழக்கிழமை இரவு தனித்தனி அறையில் குடும்பத்தினா் தூங்கிக் கொண்டிருந்தனா். நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்த மா்ம நபா்கள் ஓா் அறையில் தனியாகத் தூங்கிக் கொண்டிருந்த ராதாகிருஷ்ணனின் மனைவி கீதாவிடம் கத்தியைக் காண்பித்து மிரட்டி பீரோவிலிருந்த 40 பவுன் நகைகள், பணத்தைக் கொள்ளையடித்துச் சென்ாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து, நாமக்கல் நகரக் காவல் நிலையத்தில் ராதாகிருஷ்ணன் புகாா் அளித்தாா்.

அவருடைய வீட்டில் பணியாற்றும் ஊழியா்கள் சிலருக்கு இச் சம்பவத்தில் தொடா்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

--

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com