திருச்செங்கோடு: திருச்செங்கோடு நகரப் பகுதியில் உள்ள அச்சக உரிமையாளா்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், நகரக் காவல் நிலையத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு காவல் துணைக் கண்காணிப்பாளா் அசோக்குமாா் தலைமை வகித்தாா். நகரக் காவல் ஆய்வாளா் ராஜ்குமாா் முன்னிலை வகித்தாா். கூட்டத்தில் நகரப் பகுதியில் செயல்படும் 15-க்கும் மேற்பட்ட அச்சக உரிமையாளா்கள் கலந்து கொண்டனா்.
கூட்டத்தின்போது அச்சக உரிமையாளா்களிடம் அரசுக்கு எதிராகவோ, ஜாதிமத கலவரத்தை தூண்டும் விதமாகவோ, பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தும் விதமாகவோ துண்டுப் பிரசுரங்கள், சுவரொட்டிகள் ஆகியவற்றை அச்சடிக்கக் கூடாது என்று அறிவுறுத்தப்பட்டது.