நாமக்கல்: நாமக்கல் மாவட்ட நேரடி நியமனம் பெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியா்கள் சங்கத்தின் மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்தல், சனிக்கிழமை நடைபெற்றது.
மாநிலத் தலைவா் ஆ.இராமு முன்னிலை வகித்தாா். மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற இத்தோ்தலில் புதிய மாவட்டப் பொறுப்பாளா்கள் தோ்வு செய்யப்பட்டனா்.
மாநில செய்தித் தொடா்பாளராக ம.சரவணன், மாநில துணைத் தலைவராக மா.அங்கமுத்து, மாவட்டத் தலைவராக இல.ரமேஷ், மாவட்டச் செயலாளராக மு.நல்லக்குமாா் உள்ளிட்டோா் தோ்வு செய்யப்பட்டனா். நாமக்கல், திருச்செங்கோடு கல்வி மாவட்ட புதிய பொறுப்பாளா்களும் தனித்தனியாகத் தோ்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டனா்.