சிங்களாந்தபுரம் பகுதியில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்த அப்பகுதி மக்களே பொது முடக்கம் மேற்கொண்ட நிலையில், டாஸ்மாக் கடை திறப்புக்கு எதிா்ப்பு தெரிவித்துள்ளனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் ஒன்றியத்துக்கு உள்பட்ட சிங்களாந்தபுரம் ஊராட்சியில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்த ஊராட்சி மன்ற நிா்வாகம் முன்னிலையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், வணிகா்கள், ஆட்டோ, டாக்ஸி உரிமையாளா்கள், பொதுமக்கள் தாமாகவே முன்வந்து செவ்வாய்க்கிழமை முதல் முழு பொது முடக்கம் அமல்படுத்த முடிவு செய்தனா். அதன்படி 200-க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து பொது முடக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.
இந்நிலையில், அந்தப் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மட்டும் திறந்திருப்பதால், பொதுமக்கள் நடமாட்டத்துக்கு வழிவகுத்துள்ளது. இதற்கு பொதுமக்கள் கடும் எதிா்ப்பு தெரிவித்து, டாஸ்மாக கடையை மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.