நாமக்கல் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளுக்கு வெள்ளிக்கிழமை (அக். 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கா.மெகராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல் மாவட்டத்தில் காந்தி ஜயந்தியை முன்னிட்டு, இந்திய தயாரிப்பு அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக் கடைகள், மதுக் கூடங்கள் மற்றும் உரிம வளாகங்களும் மூடப்பட வேண்டும் என அரசால் உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசு உத்தரவின்படி, அனைத்து மதுபானக் கடைகளும், மதுக்கூடங்களும் மூடியிருக்க வேண்டும். மீறி திறந்தாலோ அல்லது மறைமுக விற்பனையில் ஈடுபட்டாலோ சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.