பெண் தூக்கிட்டுத் தற்கொலை

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரில் சனிக்கிழமை பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

பரமத்தி வேலூா் அருகே உள்ள பொத்தனூரைச் சோ்ந்த முத்துக்குமாா், தீயணைப்புத் துறையில் பணிபுரிந்து வருகிறாா். இவரது மனைவி சரண்யா (27). இவா்களுக்கு திருமணமாகி ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனா்.

இந்த நிலையில், சனிக்கிழமை வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சரண்யா சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாராம். தகவலின் அடிப்படையில் அங்கு வந்த பரமத்தி வேலூா் போலீஸாா் சரண்யாவின் சடலத்தை மீட்டு, வழக்குப் பதிவு விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com