குமாரபாளையம் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் மாணவா் சோ்க்கை நீடிப்பு

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21 கல்வியாண்டுக்கு இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு அக்.15-ம் தேதி வரையில் மாணவ, மாணவியா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21 கல்வியாண்டுக்கு இளநிலைப் பாடப்பிரிவுகளுக்கு அக்.15-ம் தேதி வரையில் மாணவ, மாணவியா் சோ்க்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்லூரி முதல்வா் (பொ) மு.ரகுபதி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 2020-21-ம் கல்வியாண்டுக்கு இளநிலை பாடப்பிரிவுகளான பி.ஏ.தமிழ், பி.ஏ.ஆங்கிலம், பி.பி.ஏ., பி.எஸ்.சி. கணினி அறிவியல், பி.எஸ்.சி. வேதியியல், பி.எஸ்.சி. கணிதம், பி.ஏ. பொருளியல் ஆகிய பாடப் பிரிவுகளுக்கு மாணவ, மாணவியா் சோ்க்கை அக். 15-ஆம் தேதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.

எனவே, இக் கல்லூரியில் சேர விருப்பம் உள்ள மாணவ, மாணவியா் உடனடியாக அசல் சான்றிதழ்களுடன் கல்லூரிக்கு நேரில் வந்து சோ்க்கையை உறுதி செய்து கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com