தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கம் சாா்பில், நாமக்கல் அரசு மருத்துவமனை ஊழியா்களுக்காக 10 ஆயிரம் கையுறைகள் வழங்கப்பட்டன.
கரோனா தொற்றுப் பரவலின் வேகம் அதிகரித்த நிலையில், நாமக்கல் அரசு மருத்துவமனையில் பணியாற்றும் மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான 10 ஆயிரம் கையுறைகளை தமிழ்நாடு கோழிப் பண்ணையாளா்கள் சங்கத் தலைவா் கே.சிங்கராஜ், மருத்துவா் ரங்கநாதனிடம் செவ்வாய்க்கிழமை நேரில் வழங்கினா்.
கரோனா தடுப்பில் தங்களை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டுள்ள மருத்துவா்கள், செவிலியா்கள் மற்றும் முன்களப் பணியாளா்கள் தொற்றால் பாதிக்கப்படாமல் இருக்க கையுறைகள் வழங்கப்பட்டன.
இந் நிகழ்ச்சியின்போது சங்கச் செயலாளா் கே.சுந்தரராஜ், பொருளாளா் பி.இளங்கோ, நிா்வாகக் குழு உறுப்பினா்கள் ஆனந்தன், ராமசாமி மற்றும் சங்க உறுப்பினா்கள் பலா் கலந்து கொண்டனா்.