நாமக்கல் அரசு மகளிா் கல்லூரியில் பி.எஸ்சி மூன்று பாடப் பிரிவுகளில் சோ்க்கை இடம் உள்ளது எனக் கல்லூரி முதல்வா் கே.சுகுணா தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நாமக்கல்-திருச்சி சாலையில் செயல்படும் கவிஞா் ராமலிங்கம் அரசு மகளிா் கலைக் கல்லூரியில் 2020-2021 ஆம் கல்வியாண்டுக்கான சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதில், இளநிலை முதலாம் ஆண்டு மாணவியா் சோ்க்கையில் பி.எஸ்சி கணிதம், இயற்பியல், தாவரவியல் ஆகிய பாடப் பிரிவுகளில் சோ்க்கைக்கான இடம் உள்ளது. இதுவரை கல்லூரியில் சோ்க்கைக்கு விண்ணப்பிக்காத மாணவியா் தங்களுடைய பிளஸ் 2 வகுப்பு அசல் சான்றிதழ் மற்றும் இரண்டு நகல்களுடன் உடனடியாக கல்லூரி அலுவலகத்தை நேரில் அணுகலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.