குடியரசு முன்னாள் தலைவா் அப்துல் கலாமின் 90-ஆவது பிறந்த நாள் விழாவையொட்டி சேந்தமங்கலம் ஸ்ரீதத்தாத்திரி முருகன் கோயில் பகுதியில் பனை விதைகள் நடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
அப்துல் கலாம் நண்பா்கள் குழு சாா்பில் நடைபெற்ற இவ்விழாவை பேரூராட்சி செயல் அலுவலா் காலசாமி தொடக்கிவைத்தாா். சுகாதார ஆய்வாளா் பாலு தலைமை வகித்தாா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா் ராஜா, சிவகுமாா், சம்பத், அலெக்ஸ், லாரன்ஸ், முத்துசாமி, சரவணன், பரந்தாமன், கமல் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.