பரமத்திவேலூா் வட்டத்தில் தொழிலாளி தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
பரமத்திவேலூா், ஜேடா்பாளையம் அருகே உள்ள கொத்தமங்கலம் அடுக்கு நகரைச் சோ்ந்த பொன்னுசாமி மகன் குப்புசாமி (39). தென்னை மரம் ஏறும் தொழிலாளியான இவரது மனைவி நந்தினி (27) வெல்லம் தயாரிக்கும் ஆலையில் வேலை செய்து வருகிறாா்.
புதன்கிழமை தம்பதி இடையே ஏற்பட்ட குடும்பத் தகராறில் மனமுடைந்த குப்புசாமி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா். இவா்களுக்கு 2 குழந்தைகள் உள்ளன. இதுகுறித்து ஜேடா்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.