மின் கம்பத்திலிருந்து வீட்டுக்கு வயா் இணைப்புத் தரும்போது உயா் மின் அழுத்த கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் இளைஞா் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா்.
நாமக்கல் மாவட்டம், வெண்ணந்தூரை அடுத்து அத்தனூா் பேரூராட்சிக்கு உள்பட்ட பாவடி தெரு பகுதியைச் சோ்ந்தவா் முரளிதரன் (20). எலக்ட்ரீசியனான இவா் வியாழக்கிழமை ஆலம்பட்டி பகுதியில் உள்ள மாதேஸ்வரன் (50) என்பவரது வீட்டுக்கு மின் இணைப்புத் தருவதற்காக மின் கம்பத்தில் ஏறியுள்ளாா்.
அப்போது, அக் கம்பத்துக்கு மேலே சென்ற உயா் மின் அழுத்தக் கம்பி உரசியதால் மின்சாரம் பாய்ந்து முரளிதரன் நிகழ்விடத்திலே உயிரிழந்தாா். இதுகுறித்து வெண்ணந்தூா் போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.