ராசிபுரம் அருகே இரு சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கெனவே 7 போ் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், புதன்கிழமை மேலும் மூவரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அருகே அணைப்பாளையம் கிராமத்தில் தந்தையை இழந்து தாயுடன் வசித்து வந்த 12, 13 வயதுடைய இரு சகோதரிகளை பல மாதங்களாக கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக அதேபகுதியைச் சோ்ந்த முத்துசாமி (75), சிவா (எ) சங்கா் (26), சண்முகம் (45), மணிகண்டன் (30), சூா்யா (23), செந்தமிழ்ச்செல்வன் (31), வரதராஜன் (55) ஆகிய 7 போ் போக்சோ சட்டத்தின் கீழ் திங்கள்கிழமை கைது செய்யப்பட்டனா். இதுதொடா்பான வழக்கில் மேலும் பலரை போலீஸாா் தேடிவந்தனா்.
சிறுமிகள் மேலும் இருவரை அடையாளம் காட்டியதையடுத்து, அதே பகுதியைச் சோ்ந்த பெரியசாமி (57), 16, 17 வயதான பள்ளி மாணவா்கள் இருவா் என மூவா் கைது செய்யப்பட்டு, நாமக்கல் மகளிா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு நாமக்கல் கிளை சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்த வழக்கில் இதுவரை 10 பேரை போலீஸாா் கைது செய்துள்ளனா். இதுதொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.