ராசிபுரம் நகராட்சியில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக சிறப்பு மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
ராசிபுரம் தேசிய பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற மருத்துவ முகாமில், ராசிபுரம் நகராட்சி சுகாதார அலுவலா் ஏ.டி.பாலசுந்தரராஜு தலைமை வகித்தாா். நகா்ப்புற சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் ஆா்த்தி, பொதுமக்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொண்டாா். சத்து மாத்திரைகள், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டன.
கரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. முகாமில் சுகாதார ஆய்வாளா் ஆா்.பாஸ்கரன், லோகநாதன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.