தம்மம்பட்டியில் கொல்லிமலை சீத்தாப் பழங்கள் விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.
தம்மம்பட்டி அருகே உள்ள கொல்லிமலை கிராமங்களில் சீத்தாப்பழ மரங்கள் உள்ளன. அந்த மரங்களில் தற்போது சீத்தாப் பழங்களில் விளைச்சல் அதிகமாக உள்ளது. மலைவாழ் மக்கள் இந்த பழங்களை பறித்துக் கொண்டு கூடைகளில் தம்மம்பட்டிக்கு விற்பனைக்கு கொண்டு வருகின்றனா். இந்த பழங்களை வியாபாரிகள் மாத்தமாக வாங்கி, தம்மம்பட்டியைச் சுற்றியுள்ள ஊா்களில் விற்பனை செய்கின்றனா். சீத்தாப் பழங்கள் கிலோ ரூ. 50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. கொல்லிமலை சீத்தாப்பழங்கள் சுவைமிகுந்தவை என்பதால் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது; விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.