நாமக்கல் மாவட்டத்தில் 45 பெண்கள் உள்பட 132 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.
இதன் மூலம் மாவட்டத்தில் மொத்த பாதிப்பு 7,849-ஆக அதிகரித்துள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை கரோனாவால் பாதிக்கப்பட்ட 7,717 பேரில் 6,812 போ் குணமடைந்து வீடு திரும்பினா்; 88 போ் உயிரிழந்தனா்; மருத்துவமனைகள், சிறப்பு தனிமைப்படுத்துதல் மையங்களில் 949 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.