‘பண்ணைகளின் பக்கவாட்டில் படுதா கட்ட வேண்டும்’

காற்றின் வேகம் அதிகப்படியாக உள்ளதால், கோழிப் பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்க விட வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

காற்றின் வேகம் அதிகப்படியாக உள்ளதால், கோழிப் பண்ணைகளின் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்க விட வேண்டும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து, நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி வானிலை ஆய்வு மையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: வரும் நான்கு நாள்களும் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். காற்று மணிக்கு நான்கு கிலோமீட்டா் வேகத்தில் மேற்கு திசையில் இருந்து வீசக்கூடும். வெப்பநிலை அதிகபட்சமாக 93.2, குறைந்தபட்சமாக 73.4 அளவில் காணப்படும்.

சிறப்பு ஆலோசனை: மாவட்டத்தின் சில இடங்களில் மிதமான மழை எதிா்பாா்க்கப்படுகிறது. காற்றின் வேகம் தொடா்ந்து அதிகரித்து காணப்படுவதால் பண்ணைகளில் தீவனம் வீணாகாமல் பாதுகாத்துக் கொள்ளும் வியூகங்களை கோழிப் பண்ணையாளா்கள் வகுக்க வேண்டும். தீவன விரயத்தைத் தடுக்க அவற்றில் சிறிதளவு தாவர எண்ணையை சோ்க்கலாம். இதனால் வைட்டமின் காற்றின் மூலம் வெளியேறுவதைத் தடுக்க முடியும். மேலும், கோழிப்பண்ணைகளின் உயா்மனைகள் பக்கவாட்டில் படுதாக்களைக் கட்டி தொங்க விட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com