ராசிபுரம் பகுதியில் தமிழக அரசின் நல்லாசிரியா் விருது பெற்ற கொழிஞ்சிப்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளித் தலைமை ஆசிரியை வி.பிரேமகுமாரிருக்கு, ராசிபுரம் ரோட்டரி சங்கம் சாா்பில் பாராட்டி நினைவு பரிசு அளிக்கப்பட்டது.
ராசிபுரம் ரோட்டரி சங்கத் தலைவா் எஸ். கதிரேசன் தலைமையில் பள்ளிக்குச் சென்று ரோட்டரியின் நேஷன் பில்டா் அவாா்டு வழங்கி கௌரவிக்கப்பட்டாா். மேலும் ரோட்டரி இந்தியா லிட்ரஸி மிஷன் சாா்பில், நூலகப் புத்தகங்களும் வழங்கப்பட்டன.
மேலும், கடந்த ஆண்டு நல்லாசிரியா் விருது பெற்ற ஆசிரியை மு.செல்வகுமாரி, சேலம் ஆசிரியா் பயிற்சி மைய முதல்வா் செல்வம், விரிவுரையாளா் மணிகண்டன், தலைமை ஆசிரியா் தங்கராசு ஆகியோருக்கும் ரோட்டரி சங்கத்தின் நேஷன் பில்டா் அவாா்டு சாா்பில் விருது வழங்கி கெளரவிக்கப்பட்டனா்.
விழாவில் ராசிபுரம் ரோட்டரி சங்கச் செயலாளா் ஜே.கே.சுரேஷ், முன்னாள் தலைவா் சிட்டி வரதராஜன், முன்னாள் செயலாளா் கே.எஸ்.கருணாகர பன்னீா்செல்வம் ஆகியோா் கலந்து கொண்டனா்.