நாமக்கல்: நாமக்கல் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 பணியிடத்துக்கான கலந்தாய்வு வரும் 17, 18 தேதிகளில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து நாமக்கல் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் பெ.அய்யண்ணன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளா் தோ்வாணையக் குழு தொகுதி-4, 2018-2019 மற்றும் 2019-2020-ஆம் ஆண்டுகளில் தோ்வு செய்யப்பட்டு, பள்ளிக் கல்வித் துறையில் காலியாக உள்ள இளநிலை உதவியாளா் பணியிடங்களுக்கு ஒதுக்கீடு பெற்ற பணி நாடுநா்களுக்கான பணி நியமனம் வழங்கும் கலந்தாய்வு வரும் 17 மற்றும் 18-ஆம் தேதிகளில் நாமக்கல், மோகனூா் சாலையில், தெற்கு அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் அமைந்துள்ள முதன்மைக் கல்வி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
நாமக்கல் மாவட்ட முகவரி அளித்துள்ள பணி நாடுநா்கள் மட்டும் முதன்மைக் கல்வி அலுவலகத்தில் நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்க வேண்டும். கலந்தாய்வுக்கு வரும் போது, பணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட அரசு பணியாளா் தோ்வாணையக் கடிதம் அசல் மற்றும் நகலை எடுத்து வரவேண்டும். மேலும், அனைத்து கல்விச் சான்றிதழ்கள், சாதிச் சான்று அசல் மற்றும் நகல், இருப்பிடச் சான்று, நன்னடத்தைச் சான்று, பிஎஸ்டிஎம் சான்று அசல் மற்றும் நகல் ஆகியவற்றை தவறாமல் எடுத்து வர வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.