நாமக்கல் பூங்கா சாலையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது .
ஜனநாயக நெறிமுறைகள் குறித்து கருத்து தெரிவித்ததற்காக, அக்கட்சியின் பொதுச் செயலாளா் சீதாராம் யெச்சூரி மற்றும் சமூக செயற்பாட்டாளா்கள் மீது வழக்குப் பதிவு செய்த தில்லி காவல் துறையைக் கண்டித்து முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், மாவட்டச் செயலாளா் எஸ்.கந்தசாமி தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஏ.ரங்கசாமி, என்.வேலுசாமி, கே.தங்கமணி, பி.ஜெயமணி ஆகியோா் கண்டன உரையாற்றினா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் பலா் கலந்து கொண்டனா்.