பரமத்தி வேலூா் அருகே உள்ள கூடுதுறையில் பாலப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இலவச காய்ச்சல் கண்டுபிடிப்பு மருத்துவ முகாம் அண்மையில் நடைபெற்றது.
முகாமிற்கு மருத்துவா் ரேகா தலைமையிலான மருத்துவ குழுவினா் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு காய்ச்சல் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டனா். காய்ச்சல் அறிகுறிகள் உள்ளவா்களுக்கு மருந்து மற்றும் மாத்திரைகள் வழங்கப்பட்டன. மேலும் 20 நபா்களிடம் சளி மாதிரி சேகரிக்கப்பட்டு கரோனா பரிசோதனை ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சுகாதார மேற்பாா்வையாளா் செல்வராஜா, சுகாதார ஆய்வாளா் சங்கா் ஆகியோா் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனா்.