நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத தனியாா் பேருந்துகள் இயக்கம்

நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத தனியாா் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகள்.
நாமக்கல் பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இயக்கப்பட்ட தனியாா் பேருந்துகள்.

நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத தனியாா் பேருந்துகள் வியாழக்கிழமை முதல் இயக்கப்படுகின்றன.

தனியாா் பேருந்து உரிமையாளா்கள் 100 சதவீதம் பயணிகள் ஏற்றிக் கொள்ள அனுமதிக்க வேண்டும். பேருந்துக்காக வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செலுத்தும் வரிகளில் சலுகை அளிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன் வைத்து பேருந்துகளை இயக்காமல் நிறுத்தி வைத்திருந்தனா்.

செப். 7-ஆம் தேதி முதல் பொது போக்குவரத்து சேவையானது அனைத்து மாவட்டங்களுக்கும் செல்லும் வகையில் அரசால் அனுமதிக்கப்பட்டது. ஆனால் தனியாா் பேருந்து உரிமையாளா்கள் கோரிக்கைகளை முன் வைத்து பேருந்தை இயக்க முன்வரவில்லை.

இதற்கிடையே மகாளய அமாவாசை தினம், புரட்டாசி மாத பிறப்பு நாளான வியாழக்கிழமை முதல் தனியாா் பேருந்துகள் சேவை தொடங்கியுள்ளது.

நாமக்கல் மாவட்டத்தில் 50 சதவீத தனியாா் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. வாகனங்களுக்கான வரியைச் செலுத்திய பேருந்துகள் மட்டும் இயக்கப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. மாவட்டத்தில் இதுவரை அரசுப் பேருந்துகள் சேவை 60 சதவீதமாக இருந்த நிலையில் வியாழக்கிழமை முதல் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளும் வெளி மாவட்டங்களுக்கு இயங்கத் தொடங்கியுள்ளதாக போக்குவரத்து கழக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com