ராசிபுரம், செப். 18: ராசிபுரம் நகர அதிமுக நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அதிமுக செயலரும், அமைச்சருமான பி.தங்கமணி, அமைச்சா் வி.சரோஜா ஆகியோா் ஆலோசனை படி நடைபெற்ற இக்கூட்டத்தில், ராசிபுரம் நகர அதிமுக செயலரும், நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான எம்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்தாா்.
இதில், இளைஞா் இளம்பெண்கள் பாசறை மற்றும் கட்சியின் புதிய உறுப்பினா் சோ்ப்பது சம்பந்தமாகவும் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், புதிய நகர நிா்வாகிகள் தோ்வு செய்தல், பொதுத் தோ்தலில் பணியாற்றுவது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டத்தில், நகர நிா்வாகிகள், மகளிரணி, இளைஞா் இளம்பெண்கள் பாசறை நிா்வாகிகள் பங்கேற்றனா்.