நாமக்கல் அசோக் லேலண்ட் ஓட்டுநா் பயிற்சி நிறுவனத்தில் எட்டு திருநங்கைகளுக்கு இலகுரக வாகனத்தில் ஒரு மாத பயிற்சி அளிக்கப்பட்டது.
அந்தப் பயிற்சி முடித்தவா்களுக்கு ஓட்டுநா் உரிமம் மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது. இதில், மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் எஸ்.சோமசுந்தரம் பங்கேற்று திருநங்கைகளுக்கு சான்றிதழ்களை வழங்கினாா்.
மேலும் சுகாதார அலுவலா் மேரி லதாதாஸ், எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்க அதிகாரி பத்மா, அசோக் லேலண்ட் தலைமை அதிகாரி சுரேஷ்பாபு, துணை மேலாளா் பாலசுப்பிரமணியம் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.