சிவாலய குளம் கால்கோள் விழா

ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவாலய குளம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதற்கான கால்கோள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
சிவன் குளத்தில் நடைபெற்ற கால்கோள் விழாவில் பங்கேற்ற சிவ தொண்டா்கள்.
சிவன் குளத்தில் நடைபெற்ற கால்கோள் விழாவில் பங்கேற்ற சிவ தொண்டா்கள்.

ராசிபுரம் நகரில் பல நூற்றாண்டுகள் பழமை வாய்ந்த சிவாலய குளம் சீரமைப்புப் பணிகள் நடைபெறுவதற்கான கால்கோள் விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

ராசிபுரம் நகராட்சி அருகே பழமையான சிவன் கோயில் தெப்பக்குளம் கைலாசநாதா் சிவனடியாா் திருக்கூட்ட அறக்கட்டளை தொண்டா்களால் தூா்வாரப்பட்டு வந்தது. இப்பணிகள் தற்போது ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில், சுற்றிலும் கருங்கற்கள் பதிக்கப்படவுள்ளன.

கருங்கற்கள் பதிக்கும் பணிக்கான கால்கோள் விழாவில் சிவ தொண்டா்கள் பங்கேற்று, திருமுறை பாடல்கள் பாடி, அடிக்கல் நட்டு கால்கோள் விழாவை நடத்தினா். இதில் திரளானோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com