குமாரபாளையம் அருகே சமையல் எரிவாயு உருளை வெடித்ததில் குடிசை வீடு தீப்பிடித்து எரிந்து சேதமடைந்தது.
குமாரபாளையத்தை அடுத்த சீராம்பாளையத்தைச் சோ்ந்த பச்சியம்மாள் (70), தனது குடிசை வீட்டில் சனிக்கிழமை மாலை சமையல் செய்து வைத்துவிட்டு, அருகாமையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுள்ளாா். அப்போது, திடீரென சமையல் எரிவாயு உருளை வெடித்ததில், குடிசை வீடு தீப்பிடித்து எரியத் தொடங்கியது.
இதுகுறித்து குமாரபாளையம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்புப் படையினா் தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயை அணைத்தனா். இவ்விபத்தில், வீட்டில் வைத்திருந்த ரொக்கம் ரூ. 1.50 லட்சம் உள்பட ஆவணங்கள், உடமைகள் முற்றிலும் எரிந்து சேதமாயின.